follow the truth

follow the truth

April, 19, 2025
Homeஉள்நாடுமத்திய வங்கி ஆளுநரின் தீர்வை எதிர்ப்பார்த்துள்ள இறக்குமதியாளர்கள்

மத்திய வங்கி ஆளுநரின் தீர்வை எதிர்ப்பார்த்துள்ள இறக்குமதியாளர்கள்

Published on

பருப்பு, சீனி, கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரம் கொள்கலன்கள் மீண்டும் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளமை தொடர்பில், மத்திய வங்கி ஆளுநரின் உடனடி தீர்வை எதிர்பார்த்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலர் தட்டுப்பாடு காரணமாக துறைமுகத்தில் தேங்கியிருந்த கொள்கலன்களை விடுப்பதற்கு தேவையான டொலரை வழங்குமாறு இதற்கு முன்னர் மத்திய வங்கி ஆளுநர் ஆலோசனை வழங்கியிருந்தார்.

எவ்வாறாயினும், தற்போது இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் மீண்டும் ஆயிரம் கொள்கலன்கள் இவ்வாறு தேங்கியுள்ளதாக அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு அதனுடன் தொடர்புடைய பிரிவுகளுக்கு கடந்த வாரம் அறியப்படுத்தியிருந்த போதிலும், அதற்கான தீர்வு இன்னும் கிடைப்பெறவில்லையென அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் இடம்பெறும் சந்திப்பில் கலந்துரையாடவுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...

ட்ரம்பின் பரஸ்பர வரி : அமெரிக்கா பறந்தது இலங்கை தூதுக்குழு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கையின் தூதுக்குழு ஒன்று அமெரிக்காவிற்கு...