follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுசமரி அத்தபத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு?

சமரி அத்தபத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு?

Published on

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விரைவில் ஓய்வுபெற உள்ளதாக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் சமரி அத்தபத்து, அறிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சாதனை படைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த ஆண்டு நடைபெறும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் தனது அணியை இறுதி ஆரம்ப சுற்றுக்கு தகுதி பெறுவதே தனது இலக்கு என்று கூறியுள்ளார்.

சமரி அத்தபத்து தான் ஓய்வுபெறப்போகும் திகதியை தற்போது குறிப்பிடவில்லை. எனினும் வெகு விரைவில் ஓய்வு குறித்து அறிவிப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடந்து முடிந்த தென்னாபிரிக்க மகளிர் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி சார்பாக, சமரி அத்தபத்து ஆட்டமிழக்காமல், 5 ஆறு ஓட்டங்கள் மற்றும் 26 நான்கு ஓட்டங்கள் உட்பட 195 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இதன்படி, ஒருநாள் போட்டியில் ஒரு பெண் வீராங்கனை பெற்ற 3ஆவது அதிகபட்ச ஒட்டம் இதுவென்பதுடன், போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...