கொழும்பில் போக்குவரத்து நெரிசலை கண்காணிப்பதற்கு ஹெலிகாப்டர் மற்றும் ட்ரோன் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பொலிஸார் மற்றும் விமானப்படை இணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த நிலையிலே, விமானப்படைத் தளபதி எயார் மாஎஷ்அல் சுதர்ஷன பத்திரனவின் பணிப்புரைக்கமைய கொழும்பு பிரதேசம் முழுவதும் Bell 212 ரக விமானம் மற்றும் ஆளில்லா விமானம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில், கொழும்பு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.