follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுதேர்தல் முறை சீர்திருத்தம், எதிர்வரும் தேர்தல்களை தொடர்பு படுத்தாது

தேர்தல் முறை சீர்திருத்தம், எதிர்வரும் தேர்தல்களை தொடர்பு படுத்தாது

Published on

தேர்தல் முறை சீர்திருத்தம், எதிர்வரும் தேர்தல்களை தொடர்பு படுத்தாது. இவ்விவகாரம் அடுத்து வரும் பாராளுமன்றத்துக்கு ஒத்திவைக்கப்படும். அது பற்றி புதிய பாராளுமன்றத்தில் கலந்து உரையாடுவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதி, அரசியலமைப்பு விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்ச ஆகியோர் தனக்கு உறுதி அளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய விகிதாசார தேர்தல் முறையை மாற்றும் சீர்திருத்தம் தேவையற்றது என்ற நிலைபாட்டை தமிழ் முற்போக்கு கூட்டணி அன்று முதல் எப்போதும் கொண்டுள்ளது. இதுவே எமது நிலைபாடாக நாடாளுமன்ற தேர்தல் சீர்திருத்த தெரிவுக்குழுவிலும் தொடர்ச்சியாக இருந்துள்ளது.

தற்போதைய விகிதாசார தேர்தல் முறையை மாற்றும் சீர்திருத்தம் தேவையற்றது என்ற நிலைப்பாட்டை தமிழ் முற்போக்கு கூட்டணி அன்று முதல் எப்போதும் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் ஜனாதிபதியை நான் சந்தித்த போது இது தொடர்பில் தற்போது முன்னெடுப்புகள் இலலை இல்லை என அவர் தெரிவித்ததாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அதேபோல், சில தினங்களுக்கு முன் நீதி, அரசியலமைப்பு விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்சவை சந்தித்த போது அவரும் இதையே தெரிவித்தார். ஆகவே இந்த பிரச்சினை இப்போதைக்கு முடிவுக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...