கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து மாலை 06.05 மணிக்கு மஹவ நோக்கி பயணிக்கும் விரைவு ரயில் இன்று (03) மாலை 06.15 மணியளவில் மருதானை மற்றும் தெமட்டகொட புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக பிரதான வீதியில் புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.