follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉலகம்காஸாவில் உணவுப் பொருட்களை கொண்டு சென்ற வாகனம் மீது தாக்குதல்

காஸாவில் உணவுப் பொருட்களை கொண்டு சென்ற வாகனம் மீது தாக்குதல்

Published on

காஸா மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்காக சென்று கொண்டிருந்த தொண்டு நிறுவன வாகனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.

பிரிட்டன், அவுஸ்திரேலியா, போலந்து, பாலஸ்தீனத்தை சேர்ந்தவர்களும், அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் இரட்டைக் குடியுரிமை பெற்ற ஒருவரும் உயிரிழந்தவர்களில் அடங்குவர்.

தொண்டு நிறுவனம் சேகரித்த உணவுப் பொருட்களுடன் காஸாவை நோக்கி சென்று கொண்டிருந்த நிவாரணக் கப்பல்கள் திருப்பி அழைக்கப்பட்டுள்ளன.

இந்த தாக்குதலுக்கு எத்தகைய குழப்பமும் காரணமில்லை எனவும் தமது ஒவ்வொரு நகர்வு குறித்தும் இஸ்ரேல் இராணுவத்திடம் அறிவித்திருந்த போதும் தமது வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் WCK தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தவறுதலாக இடம்பெற்ற தாக்குதல் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஸ்பெயினும் போலந்தும் இஸ்ரேலிடம் விளக்கம் கோரியுள்ளது.

பொதுமக்களைப் பாதுகாப்பதில் போதுமான நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொள்ளவில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீன நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுக்க தடை

தங்கள் நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீனா தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், சீனாவிலுள்ள ரத்த உறவுகள்,...

ஆளே இல்லாமல் பூமிக்குத் திரும்பிய விண்கலம்

ஆளில்லா ஸ்டார்லைனர் விண்கலம் இன்று காலை பூமிக்குத் திரும்பியது. அந்த விண்கலத்தில் பூமிக்குத் திரும்ப வேண்டியிருந்த விண்வெளி வீரர்கள்...

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜோ பைடனின் மகன் – 17 ஆண்டுகள் சிறை தண்டனை?

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் மீதான வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பான விசாரணையில் தமது...