follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1"இம்முறை தயாரித்த புத்தாண்டு சுபச் சீட்டை மாற்ற முடியாது"

“இம்முறை தயாரித்த புத்தாண்டு சுபச் சீட்டை மாற்ற முடியாது”

Published on

அரச சுப காரியக் குழுவினால் தயாரிக்கப்பட்ட புத்தாண்டு சுபச் சீட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

அந்த அதிர்ஷ்டக் கைங்கர்யங்களின் நடைமுறைத் தன்மை மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்ற போதிலும், தற்போதைக்கு அதிர்ஷ்டத்தை மாற்ற முடியாது எனவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு புத்தாண்டு அட்டைகள் தயாரிப்பில் அனைத்து தரப்பினரின் கருத்துக்களும் எடுக்கப்படும் என்று கூறிய அவர், இந்த ஆண்டு புத்தாண்டு அட்டைகளுக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் தரப்பினரும் அங்கு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றார்.

இதேவேளை, சிங்கள, தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் தற்போதுள்ள அரச சுப காரியக் குழு கலைக்கப்பட்டு சட்டரீதியாக புதிய அரச அனுசரணை குழுவொன்று அமைக்கப்படும் என புத்தசாசன அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன நேற்று (ஏப்ரல் 2) இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...