follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளில் பெரும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை

ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளில் பெரும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை

Published on

ஜப்பான், தாய்வான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணிக்கு தாய்வான் அருகே 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) தெரிவித்துள்ளது.

ஒகினாவா தீவு, மியாகோஜிமா தீவு மற்றும் யேயாமா தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், 3 மீட்டர் (9.8 அடி) உயரம் வரை அலைகள் எழும் என்றுன் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

“சுனாமி அலைகள் கடற்கரையை நெருங்கி வருகின்றன. முடிந்தவரை விரைவாக வெளியேறவும். அலைகள் மீண்டும் மீண்டும் அடிக்கலாம். அனைத்து எச்சரிக்கைகளும் நீக்கப்படும் வரை தொடர்ந்து வெளியேறவும்” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தாய்வானில், நிலநடுக்கம் தீவு முழுவதும் உணரப்பட்டது, சில கட்டிடங்கள் அஸ்திவாரங்களை அசைத்து, தீவின் கிழக்குப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

தைபேயில், நிலநடுக்கத்தின் சக்தியால் புத்தக அலமாரிகள் மற்றும் தளபாடங்கள் இடிந்த நிலையில், வாகனங்கள் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டன. 15 நிமிடங்களுக்குப் பிறகு தலைநகரில் தொடர்ச்சியான நில அதிர்வுகள் உணரப்பட்டு அடுத்த ஒரு மணி நேரத்திற்கும் தொடர்ந்தன.

தாய்வான் அதிகாரிகள் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தனர், குடியிருப்பாளர்கள் “விழிப்புடன்” இருக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

கடலோரப் பகுதிகளில் “உயர்ந்த சுனாமி அலைகள்” ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிலிப்பைன்ஸின் நில அதிர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...