முழுமையான தடுப்பூசி பெற்றுக் கொண்ட மேலும் 06 நாட்டவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்படாமல் சிங்கப்பூர் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மாதம் 14-ஆம் திகதி முதல், தாய்லாந்திலிருந்து வரும் பயணிகள், சிங்கப்பூரில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, கம்போடியா, ஃபிஜி, மாலைத்தீவு மற்றும் துருக்கி ஆகிய நாட்டுப் பயணிகள், டிசம்பர் 16 முதல் அந்தச் சலுகையை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.