follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுபூஸ்டர் தடுப்பூசி வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசனை

பூஸ்டர் தடுப்பூசி வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசனை

Published on

கொவிட் தடுப்பூசி இரண்டையும் பெற்று 03 மாதங்கள் பூர்த்தியான 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நடமாடும் சேவை மூலம் மூன்றாவது தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இன்று (26) இடம்பெற்ற கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்று ஒரு மாதம் பூர்த்தியான 20 வயதுக்கு மேற்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் மூன்றாவது கொவிட் தடுப்பூசி செலுத்துமாறும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் கொவிட் நோயாளிகளுக்காக, பிரித்தானியா உள்ளிட்ட சில நாடுகளில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மோல்னுபிரவீர் வில்லை (Molnupiravir Capsule) பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த வில்லைகளையும் நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

No description available.

No description available.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...