follow the truth

follow the truth

March, 12, 2025
HomeTOP1அதிவேக நெடுஞ்சாலைகளின் தினசரி செயல்பாடுகள் தனியாருக்கு

அதிவேக நெடுஞ்சாலைகளின் தினசரி செயல்பாடுகள் தனியாருக்கு

Published on

இன்று (01) முதல் முறையான முகாமைத்துவ உடன்படிக்கையின் கீழ் நெடுஞ்சாலைகளின் தினசரி செயற்பாடுகள் மற்றும் முகாமைத்துவம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தனியார் துறையினர் இணைந்து நடத்திய சட்ட மற்றும் நிதி சாத்தியக்கூறு ஆய்வின் பின்னர், சம்பந்தப்பட்ட அனைத்து சொத்துக்களும் ஆறு மாதங்களுக்குள் அவர்களுக்கு மாற்றப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவினால் கடந்த 25ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பு, அதிவேக நெடுஞ்சாலைக்கு சொந்தமான நிலம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஊழியர்களை வர்த்தக ரீதியாக நிர்வகிக்கும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையை பிரித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிரதமர் அலுவலகத்திலிருந்து பொதுமக்களுக்கு ஒரு அவசர எச்சரிக்கை

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும் மோசடி வணிகமான 'கிரிப்டோ' நாணய வணிகங்கள் குறித்து பிரதமர் அலுவலகம்...

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளதுடன்,...

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை...