follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்

Published on

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி 447 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டரின் விலை 07 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 440 ரூபாவாகும்.

அதேநேரம் 468 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீட்டர் ஒன்றின் விலை 72 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 386 ரூபாவாகும்.

இதேவேளை, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் ​குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 245 ரூபாவாகும்.

அதேநேரம் ஒக்டேன் 92 பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசலின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 371 ரூபாய்க்கும், ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 363 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

லங்கா IOC நிறுவனமும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு நிகரான விலைக்கு தனது எரிபொருள் விலை திருத்தத்தினை மேற்கொண்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...