follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுமனித பாவனைக்கு தகுதியற்ற பாண்தூள் மூட்டைகள் கண்டுபிடிப்பு

மனித பாவனைக்கு தகுதியற்ற பாண்தூள் மூட்டைகள் கண்டுபிடிப்பு

Published on

கனேவல்பொல பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மனித பாவனைக்கு தகுதியற்ற சுமார் 15 கோடி பெறுமதியான பாண் தூள் மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கெக்கிரவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த பாண் தூள் பொதிகள் சந்தையில் வெளியிட தயாராக இருந்ததாகவும் மிகப் பெரிய கிடங்கில் இவை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும், 25 மற்றும் 50 கிலோ எடையுள்ள 10,000க்கும் மேற்பட்ட பாண் தூள் மூட்டைகளில் இருந்ததாகவும் சோதனை நடத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கெக்கிராவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட உடனடி சுற்றிவளைப்பின் போதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...