நிக்கவெரட்டிய , கந்தேகெதர பிரதேசத்தில் இன்று பிற்பகல் எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்துச் சிதறியதில் வீடு பலத்த சேதம் அடைந்துள்ளதாக நிக்கவெரட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்
குறித்த வெடிப்பு சம்பவத்தினால் வீட்டில் உள்ளவர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.
எரிவாயு தாங்கி வெடித்தமையினால் ஏற்பட்ட தீயினால் வீடு மற்றும் வீட்டின் உடமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் எரிவாயு கசிவு காரணமாக எரிவாயு சிலிண்டர் வெடித்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.