பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த டிங்கர் லசந்த என்றழைக்கப்படும் லுனுவிலகே லசந்த என்பவர் இன்று (26) காலை களுத்துறை பிரதேசத்தில் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச சூட்டு சம்பவத்தில் உயிரிழந்துள்ளாா்.
இவர், சன்ஷயின் சுத்தா என்பவரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என்று பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நபரிடமிருந்த பிஸ்டோல் வகையைச் துப்பாக்கி மற்றும் கைகுண்டு என்பவற்றை தேடி கண்டுபிடிப்பதற்காக குறித்த பிரதேசத்துக்கு சென்றபோது, சந்தேகநபர் துப்பாக்கியினூடாக பொலிஸார் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளாா். அதன் பின்னர் பொலிஸாா் நடத்திய எதிர் தாக்குதலில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளாா்.
இச்சம்பவத்தில் மேலும் இரு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.