follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP2ரணில் - பசில் இரகசிய சந்திப்பு இன்று

ரணில் – பசில் இரகசிய சந்திப்பு இன்று

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் மீண்டும் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பில் அவர்கள் இருவர் மாத்திரம் கலந்து கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, அடுத்ததாக இடம்பெறவுள்ள தேர்தல் பொதுத் தேர்தலா அல்லது ஜனாதிபதி தேர்தலா என்பது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

குறித்த சந்திப்பின் போது, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துவது பொருத்தமானதாக இருக்கும் என அவர் வலியுறுத்தியிருந்தார்.

அவ்வாறு இடம்பெறுமானால் தற்போது ஆளும் கட்சி அந்தஸ்த்தில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் எண்ணிக்கையினை கணிசமாக அதிகரித்துக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கட்சியின் எதிர்காலத் திட்டம் மற்றும் தேர்தலுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை என நகர அபிவிருத்தி மற்றும்...

கவர்ச்சியான பிரச்சாரங்களால் ஆட்சிக்கு அவசரப்படுகிறார் அனுர

ஊழலை ஒழிப்பதற்கோ அல்லது மோசடியாளர்களைத் தண்டிப்பதற்கோ ஜனாதிபதி அதிகாரம்தான் தேவையென தேசிய மக்கள் சக்தி கருதக் கூடாது என...