follow the truth

follow the truth

September, 27, 2024
HomeTOP1(UPDATE)கிண்ணியா நகரசபை தலைவர் கைது : 9ஆம் திகதிவரை விளக்கமறியலில்

(UPDATE)கிண்ணியா நகரசபை தலைவர் கைது : 9ஆம் திகதிவரை விளக்கமறியலில்

Published on

(UPDATE) கிண்ணியா- குறிஞ்சாக்கேணி படகு விபத்துடன் தொடர்புடையதாக கைதுசெய்யப்பட்ட நான்காவது சந்தேக நபரான கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீமை எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் அவரை இன்று (25)  பொலிசார் ஆஜர்படுத்திய போதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

—————————————————————————————————-

(UPDATE) திருகோணமலை – குறிஞ்சாக்கேணியில் மிதப்பு பாலம் கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம் நலீம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

———————————————————————————————

கிண்ணியாவில் படகு விபத்தில் அறுவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பில் கிண்ணியா நகர சபைத் தலைவர் பொலிஸாரால் கைது செய்யப்படலாமென அறியமுடிகின்றது.

கிண்ணியா – குறிஞ்சங்கேணி களப்பு பகுதியில் பயணிகள் போக்குவரத்திற்காக படகு சேவைக்கு கிண்ணியா நகரசபை அனுமதி வழங்கியதாக கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா நேற்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்த நிலையில் நகர சபைத் தலைவர் கைது செய்யடலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது

நகர சபைத் தலைவரை விசாரணைக்கு அழைக்கவுள்ள பொலிஸார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் தெரியவருகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 29 முதல் மூடப்படவுள்ள ரயில் பாதை

பராமரிப்பு பணிகள் காரணமாக களனிவெளி புகையிரத பாதையில் பங்கிரிவத்தை புகையிரத கடவையை தற்காலிகமாக மூடுவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை...

ஜனாதிபதி அலுவலக சட்டப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜே. எம். விஜேபண்டார நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால், ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான...

மக்களுக்கு அதிகபட்ச நிவாரணம் கிடைக்கும் வகையில் மின் கட்டணத்தை குறைப்பதே எதிர்பார்ப்பு

மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான ஆய்வறிக்கை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் கலாநிதி...