ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர,
“இந்த நேரத்தில் நாட்டை மீட்டெடுக்க பாடுபட்ட தலைவராக ஜனாதிபதியை காண்கிறோம். அவரை ஆதரிக்க வேண்டும். எமக்கு வேறு தலைவர்கள் இல்லை. உறவு, நட்பு என வேறு தரப்பினரை கட்சி ஆதரிக்குமாயின் நாமும் சில முடிவுகளை எடுக்க நேரிடும். எங்களை கவனிக்கும் விதத்தில் தான் நாங்களும் அவர்களை கவனிக்க வேண்டியிருக்கும்..”