follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP2ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் 02 இலங்கையர்களும் மீட்பு

ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் 02 இலங்கையர்களும் மீட்பு

Published on

தெற்கு ஏமனில் சரக்குக் கப்பல் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கப்பலில் இருந்த காயமடைந்தவர்கள் உட்பட 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இரண்டு இலங்கையர்களும் அடங்குவதாகவும் அவர்களில் ஒருவர் காயமடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்திய கடற்படையினரால் இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

காயமடைந்த இலங்கையர் பற்றிய விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. கப்பலில் வேறு இலங்கையர்கள் யாராவது இருந்தார்களா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.

INS கொல்கத்தா கப்பல், ஹெலிகொப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் அந்த குழுவினர் மீட்கப்பட்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...