follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP2சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் - மேலும் 03 ஊழியர்கள் பணி இடைநிறுத்தம்

சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் – மேலும் 03 ஊழியர்கள் பணி இடைநிறுத்தம்

Published on

ரயிலில் பயணித்த இரு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ரயில்வே ஊழியர்கள் தாக்கிய சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தின் மேலும் மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்களத்தின் ஆறு அதிகாரிகளின் சேவைகளை இடைநிறுத்துவதற்கு ரயில்வே பொது முகாமையாளர் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற பொடி மெனிக்கே ரயிலில் குறித்த சுற்றுலாப் பயணிகள் இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டுகளுடன் முதல் வகுப்பில் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, சுற்றுலாப் பயணிகள் இருவரையும் நாவலப்பிட்டி ரயில் நிலைய ஊழியர்கள் தாக்கி, ரயிலில் இருந்து வெளியே இழுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...