பெலாரஸ் மீது தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
போலந்து எல்லை பகுதியில் தஞ்சக்கோரிக்கையாளர்களின் பிரச்சினையை தூண்டிய காரணத்திற்காகவும் பெலாரஸ் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் தன் பாதுகாப்பு நிலையை பொருட்படுத்தாது குடியேறிகளை எல்லையை நோக்கி இட்டுச்செல்வதாகவும் ஐரோப்பிய ஒன்றிய முன்னணி இராஜதந்திரியான ஜோசெப் பொரல்டி கூறினார்.
இருப்பினும் இதனை பெலாரஸ் மறுக்கின்ற வேளை கடந்த திங்கட்கிழமை போலந்து துருப்பினரால் எல்லை கடவை ஒன்றில் வைத்து நூற்றுக்கணக்கான குடியேறிகள் தடுத்து நிறுத்தப்பட்டும் எல்லை முள்வேலிக்கு முன்னால் குடியேறிகள் வீதி ஒன்றில் அமர்ந்திருப்பதும் மறுபக்கம் போலந்து படையினர் நிலைநிறுத்தப்பட்டிருப்பதும் அங்கிருந்து வெளியாகும் படங்கள் காட்டுகின்றன.
போலந்து படைகளுக்கும் பெலாரஸ் படைகளுக்கு நடுவே சிக்கியிருக்கும் இந்த தஞ்சக் கோரிக்கையாளர்கள் முன்னேறிச் செல்வதை போலந்து தடுக்கும் நிலையில் பின்வாங்குவதை பெலாரஸ் தடுப்பதாக போலந்து அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.