அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மருந்து உற்பத்தி, விநியோக மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 60 அத்தியாவசிய மருந்துகளை சேர்ந்த 131 டோஸ்களின் விலைகள் கட்டுப்படுத்தப்பட்டு, அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட மருந்து வகைகளை நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலைக்கு அதிக விலையில் விற்பனை செய்வது சட்டவிரோத செயற்பாடாகும் என்று அமைச்சு அறிவித்துள்ளது.
சில்லறை விலைக்கு மீறி அதிக விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டால் complaints@nmra.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிக்குமாறு அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.எஸ்.கே. ரத்நாயக்க தெரிவித்துள்ளாா்.
டொலரின் பெறுமதி அதிகரிப்புக்கமைய கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 9 சதவீதம் விலை அதிகரிப்புக்கான அனுமதி கிடைத்திருந்ததாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.