follow the truth

follow the truth

February, 3, 2025
HomeTOP1மின்சார சபையின் ஊடக பேச்சாளர் இராஜினாமா

மின்சார சபையின் ஊடக பேச்சாளர் இராஜினாமா

Published on

இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நொயல் பிரியந்த தமது பதவி விலகல் கடிதத்தை அமைச்சர் கஞ்சன விஜயசேகரவிடம் கையளித்துள்ளார்.

அவர் அண்மையில் வௌியிட்ட கருத்து தொடர்பில் சமூகத்தில் பெரும் சர்ச்சையாக மாறியதால் அது தொடர்பில் அவர் தமது வருத்தத்தை தெரிவித்து அறிக்கை ஒன்றையும் வௌியிட்டுள்ளார்.

கல்வியில் சிறந்து விளங்கிய முன்னைய தலைமுறையினரின் முன்னுதாரணத்தை கொண்டு, தேவை ஏற்பட்டால் எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தி மாணவர்கள் படிக்க வேண்டும் என்று அவர் முன்னதாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின்போது கருத்து வெளியிட்டிருந்தார்.

இது பொதுமக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ள நிலையிலேயே அவர் தமது பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

யானை – மனித மோதலுக்கு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் தீர்வு

இலங்கையின் தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள யானை - மனித மோதலுக்கு பல்வேறு தீர்வுகள் தேடப்பட்ட பின்னணியில் அதற்காக விஞ்ஞான...

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக லபார் தாஹிர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக நீதிமன்றத்தில் தற்போதிருக்கும் சிரேஷ்ட நீதியரசரான மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற...

பாதுகாப்பாக வாகனங்களை இறக்குமதி செய்ய ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் தயார்

நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதால், மிகவும் பாதுகாப்பான முறையில் வாகனங்களை இறக்குமதி செய்ய தயாராக...