பனாமுர பொலிஸ் நிலையத்தின் சிறை கூடத்திற்குள் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடும்ப தகராறு காரணமாக மனைவியினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, 38 வயதான இளைஞர் ஒருவர் பனாமுர பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞனின் சடலம், சிறைக்கூடத்திற்குள் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த இளைஞனின் உயிரிழப்புக்கு பொலிஸாரே காரணம் எனக் கோரி, பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை அடுத்து பனாமுர பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரு அதிகாரிகள் தற்காலிகமோக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.