follow the truth

follow the truth

September, 27, 2024
Homeஉள்நாடுNMRA இன் தரவுகள் காணாமல்போன குற்றச்சாட்டில் கைதான மென்பொருள் பொறியியலாளருக்கு பிணை

NMRA இன் தரவுகள் காணாமல்போன குற்றச்சாட்டில் கைதான மென்பொருள் பொறியியலாளருக்கு பிணை

Published on

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின்  (NMRA)  தரவுத் தளத்திலிருந்து தரவுகள் காணாமல்போன சம்பவம் தொடர்பில் கைதான எபிக் லங்கா டெக்னொலஜி தனியார் நிறுவனத்தின் மென்பொருள் பொறியியலாளர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றினால் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரை 50,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல உத்தரவிட்டார்.

அது தவிர சந்தேக நபருக்கு வெளிநாட்டு பயணத்தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த வழக்கை ஜனவரி 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்குமாறு சிஐடிக்கு உத்தரவிட்டார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள இரு வீதிகள் மக்கள் பாவனைக்கு

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள ஸ்ரீமத் பாரோன் ஜயதிலக மாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தை இன்று (27) முதல்...

இலங்கையுடன் நெருக்கமாகப் பணியாற்ற ஜப்பான் தயார்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணியான ஊழல் மற்றும் முறைகேடுகளை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பான்...

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்...