follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுNMRA இன் தரவுகள் காணாமல்போன குற்றச்சாட்டில் கைதான மென்பொருள் பொறியியலாளருக்கு பிணை

NMRA இன் தரவுகள் காணாமல்போன குற்றச்சாட்டில் கைதான மென்பொருள் பொறியியலாளருக்கு பிணை

Published on

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின்  (NMRA)  தரவுத் தளத்திலிருந்து தரவுகள் காணாமல்போன சம்பவம் தொடர்பில் கைதான எபிக் லங்கா டெக்னொலஜி தனியார் நிறுவனத்தின் மென்பொருள் பொறியியலாளர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றினால் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரை 50,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல உத்தரவிட்டார்.

அது தவிர சந்தேக நபருக்கு வெளிநாட்டு பயணத்தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த வழக்கை ஜனவரி 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்குமாறு சிஐடிக்கு உத்தரவிட்டார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லசந்த வழக்கின் சந்தேக நபர்களை விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுவிக்க...

அரசு நெல்லுக்கான நிர்ணய விலையை அறிவித்தது

ஒரு கிலோ நெல்லுக்கு வழங்கப்படும் விலைகளை அரசாங்கம் இன்று (05) நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் அறிவித்துள்ளது. விவசாயிகளிடமிருந்து நாளை...

இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பெப்ரவரி 9 ஆம் திகதி முதல்...