தமிழகத்தின் கோயம்புத்தூரில் உயிரிழந்தது இலங்கையின் பாதாளக்குழு உறுப்பினர் அங்கொட லொக்கா என்பது மரபணு பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அங்கொட லொக்கா என அழைக்கப்படும் மத்துமகே சந்தன லசந்த பெரேரா 2020 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் திகதி இந்தியாவின் கோயம்புத்தூரில் மாரடைப்பால் காலமானார்.
ஆனால் அவரது அடையாளத்தில் ஏற்பட்ட பிரச்சினையால், மரபணு பரிசோதனை மூலம் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்த இந்திய அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர்.
இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனையில் அவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.