உகண்டா தலைநகர் கம்பாலாவில் இரு தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் 33 போ் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதலுக்குள்ளான பொது மக்களை மீட்டெடுக்கும் பணிகளை பாதுகாப்பு படையினர் முன்னெடுத்து வருகின்றனா்.