follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுமரம் முறிந்து விழுந்ததில் மற்றொரு குழந்தையும் மரணம்

மரம் முறிந்து விழுந்ததில் மற்றொரு குழந்தையும் மரணம்

Published on

கம்பளை பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் மரம் முறிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு குழந்தை உயிரிழந்துள்ளது.

கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (10) காலை குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை சர்வதேச முன்பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் காயமடைந்ததுடன், ஒரு குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

ஏனைய இரண்டு பிள்ளைகளும் சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை ஒன்று 05 நாட்களுக்கு பின்னர் இன்று காலை உயிரிழந்துள்ளது.

கம்பளை பிரதேசத்தில் வசிக்கும் 5 வயது குழந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எத்காலா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...