ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் கடந்த சில நாட்களாக பறவைக் காய்ச்சலின் அறிகுறிகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக விலங்குகளின் சுகாதாரம் தொடர்பான உலக ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
மீண்டும் குறித்த வைரஸ் வேகமாக பரவும் நிலையை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கால்நடை வளர்ப்பு பண்னைகளில் பறவைக்காய்ச்சலுடன் கூடிய விலங்குகள் அடையாளம் காணப்படுகின்றன. குறித்த நிலை இதற்கு முன்னரும் ஏற்பட்ட நிலையில் சுமார் 10 மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் கொல்லப்பட்டன.
அத்துடன் கால்நடை சார்ந்த வர்த்தகங்களிலும் கட்டுப்பாடுகள் சில விதிக்கப்பட்டன. பறவைகளில் அடையாளம் காணப்படும் இந்த காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சீனாவில் பறவைக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 21 பேர் இந்த வருடத்தில் அடையாளம் காணப்பட்டனர். இதேவேளை தென்கொரியாவிலும் பறவைக்காய்ச்சலின் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பா மற்றும் ஆசிய வலய நாடுகளில் இந்த நோய் வேகமாக பரவும் தன்மையை அடைந்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.