follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைமை சந்திரிக்காவுக்கு

பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைமை சந்திரிக்காவுக்கு

Published on

பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைமைத்துவ சபையின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணியின் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நேற்று (06) இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் திசர குணசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் தேர்தலில் பரந்த கூட்டணி என்ற குடையின் கீழ் போட்டியிடவுள்ளது.

பொதுஜன பெரமுனவின் அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தலைமைத்துவ சபையில் 25% பிரதிநிதித்துவமும், செயற்குழுவில் 50% அதிகாரமும் இருக்கும் எனவும் திசர குணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

பொதுஜன ஐக்கிய முன்னணியின் புதிய அதிகாரி சபையை எதிர்வரும் 22ஆம் திகதி நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி கட்சியின் செயலாளர் பதவிக்கு புதியவர் நியமிக்கப்படுவார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...