follow the truth

follow the truth

March, 17, 2025
Homeஉள்நாடு180 மில்லியன் ரூபா பெறுமதியான கொகேய்னுடன் துனீசிய பிரஜை கைது

180 மில்லியன் ரூபா பெறுமதியான கொகேய்னுடன் துனீசிய பிரஜை கைது

Published on

180 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 4 கிலோ 527 கிராம் கொகேய்னுடன் துனீசிய பிரஜை ஒருவர் இன்று (15) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கலாநிதி பட்டம் பெற்ற சர்வதேச நிதி நிறுவனமொன்றின் தலைவர் என்பதை காட்டும் போலி ஆவணங்களையும் சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர் துனீசியாவிலிருந்து பிரேசிலுக்கு பயணித்து, அங்கிருந்து தோஹாவிற்கு சென்று பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், பயணியொருவரால் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட அதிகூடிய கொகேய்ன் தொகை இதுவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட கொகேய்னுடன் குறித்த சந்தேக நபரை, போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்லாமிய பாட நூல்களை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தடையை நீக்க வேண்டும் – ஹிஸ்புல்லா கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை...

கணேமுல்ல சஞ்சீவ கொலை – பூஸா சிறைச்சாலை அதிகாரிக்கு விளக்கமறியல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பூஸா சிறைச்சாலை அதிகாரி ஒருவரை எதிர்வரும் 21 ஆம்...

ஜனாதிபதி – சுற்றுலா அமைச்சு அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

இலங்கை ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால்,எமது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான உட்கட்டமைப்பு...