மக்களுக்காக சேவையாற்றுவதற்காக வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓயவூதிய கொடுப்பனவு எதற்கு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் இன்று நாடாளுமன்றில் இடம்பெற்று வரும் வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் கேள்வி எழுப்பினாா்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு ஓய்வூதிய கொடுப்பனவு நீக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டாா்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
31 வயதாகும் எனக்கு ஓய்வூதிய கொடுப்பனவு எனக்கு தேவையில்லை. எது எவ்வாறாயினும் ஓய்வூதிய கொடுப்பனவை இல்லாமலாக்கினால் ஒருசில எம்.பிக்கள் அதிகாரித்தில் இருக்கும்போது பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவாா்கள் என்றும் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் இதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் பேசப்பட்டிருப்பதாக தனக்கு அறியக் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டாா்.