follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1பொருட்களின் விலையை மேலும் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை

பொருட்களின் விலையை மேலும் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை

Published on

தற்போதைய பொருட்களின் விலையை மேலும் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ரூபாயின் வலுவூட்டல் மிகவும் மெதுவாக நடைபெறுவதால், மக்களின் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதுதான் இப்போது செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நாம் பொருட்களின் விலையை கொண்டு வரக்கூடிய மிகக் குறைந்த நிலையை அடைந்துவிட்டோம். காய்கறிகள் போன்ற சில விஷயங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. ஆனால் அந்நியச் செலாவணியைப் பொறுத்தவரை, பொருட்களின் விலை நாம் கொண்டு வரக்கூடிய மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது.

ரூபாயின் மதிப்பு மெல்ல மெல்ல வலுவடைகிறது. வருமானத்தை அதிகரிக்க செய்ய வேண்டியது. அல்லது பொருட்களின் விலை மும்மடங்கு உயர்வுக்கு ஏற்றவாறு வருமானம் ஈட்ட வேண்டும். அரசு ஊழியர்களின் வருமானம் இந்த ஆண்டு ரூ.10,000 அதிகரிக்கும். இது பொருட்களின் விலை உயர்வுக்கு கூட போதுமானதாக இல்லை. ஆனால் இந்த ஆண்டு இதைத்தான் அரசாங்கத்தால் தாங்க முடியும். அடுத்த சவால் வருமானம்..”

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களால் பொருளாதாரம் திட்டமிட்ட வகையில் வலுவடைந்து வருவதாக சாகல ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...