கிழக்கு ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஸ்பின் கர் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் சம்பவத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாக சர்வசே ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பள்ளிவாசலில் உட்புறத்தில் இருந்த வெடிபொருட்கள் வெடித்தபோது வெடிப்பு நிகழ்ந்ததாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறியுள்ளனர்.