follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுஒரே நாடு - ஒரே சட்டம் : மக்களை நாடும் ஜனாதிபதி செயலணி

ஒரே நாடு – ஒரே சட்டம் : மக்களை நாடும் ஜனாதிபதி செயலணி

Published on

‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ என்ற எண்ணக்கருவை செயற்படுத்தும் வகையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி சட்டவரையினை தயார் செய்வதற்காக பொதுசன அபிப்பிராயத்தை கோர தீர்மானித்துள்ளது.

அதற்கமைய நிறுவனம், குழு அல்லது தனிநபர் தங்களின் அபிப்பிராயங்களை ocol.consultations@gmail.com என்ற உத்தியோகப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்.

அல்லது செயலாளர், ‘ஒரே நாடு-ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி’ செயலணி, தபால் பெட்டி இலக்கம் .504 கொழும்பு’ என்ற முகவரிக்கு இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க முடியும்.

‘ஒரே நாடு-ஒரே சட்டம்’ எண்ணக்கருவை செயற்படுத்தும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த மாதம் 26ஆம் திகதி பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தலைமையில் ஜனாதிபதி செயலணியை நியமித்தார்.

ஜனாதிபதி செயலணியினர் ஒவ்வொரு மாதம் ஜனாதிபதிக்கு முன்னேற்ற அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் முழுமையான இறுதி அறிக்கை 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் அல்லது அத்தினத்தன்று சமர்ப்பிக்கப்படவேண்டும் என பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

றமழான் காலத்தில் விசேட விடுமுறை

2025 றமழான் காலத்தில் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் தொழுகையிலும் மாதவழிபாடுகளிலும் கலந்துகொள்வதற்கு ஏற்றவகையில் ஒழுங்குககளை மேற்கொள்ளுமாறு பொது நிர்வாக, மாகாண...

குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தை 24 மணி நேரமும் இயக்க தீர்மானம்

தற்போதுள்ள கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தை நீக்குவதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து 24 மணித்தியாலயங்கள் மேற்கொள்வதன்...

லசந்த வழக்கின் சந்தேக நபர்களை விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுவிக்க...