புதிய களனி பாலத்தின் நிர்மாணப்பணிகள் காரணமாக கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொட இடமாற்றம் பகுதி முதல் களனி பாலம் வரையிலான வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 14ஆம் திகதி காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரையில் குறித்த வீதி ஊடான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொழும்பு – கண்டி வீதி (A1) மற்றும் கொழும்பு – நீர்கொழும்பு வீதியை (A3) மாற்றுப் பாதையாக பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.