follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடு21 மெற்றிக் டன் விதை உருளைக்கிழங்குகளில் பக்டீரியா தாக்கம்

21 மெற்றிக் டன் விதை உருளைக்கிழங்குகளில் பக்டீரியா தாக்கம்

Published on

யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் களஞ்சியப்பட்டுத்தப்பட்டுள்ள விதை உருளைக்கிழங்குகளில் ஏற்பட்ட பக்டீரியா தாக்கம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை, விவசாய அமைச்சரிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து விசேட குழுவொன்று சென்று யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் களஞ்சியப்பட்டுத்தப்பட்டுள்ள விதை உருளைக்கிழங்குகள் தொடர்பில் ஆராய்ந்தது.

விவசாய அமைச்சு மற்றும் நவீன விவசாய மேம்பாட்டுத்திட்டத்தின் உயரதிகாரிகள் குறித்த குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

இதன்போது, உலக வங்கியின் நவீன விவசாய மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் மானிய அடிப்படையில் யாழ்ப்பாணத்திற்கு கிடைக்கப்பெற்ற 21 மெற்றிக் டன் விதை உருளைக்கிழங்குகளில் பக்டீரியா தாக்கம் ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டிருந்தது.

அதேநேரம் உரிய வகையில் களஞ்சியப்படுத்தாமையினால் அதில் 40 சதவீத உருளைக்கிழங்குகளில் முற்றிலுமாக பக்டீரியா தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்ப்பதற்கு, பக்டீரியா தாக்கம் ஏற்பட்ட விதை உருளைக்கிழங்குகளை உடனடியாக அழிப்பதற்கு அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த விதை உருளைக்கிழங்குகள் அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...