காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக சிறைக்கைதிகளுக்கு அவர்களின் உறவினர்களுடன் உரையாடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைகள் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறைச்சாலை திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள E visit என்ற இந்த முறைமையின் ஊடாக காணொளியூடாக இரு தரப்பினரும் உரையாட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலை திணைக்களத்தின் மின்னஞ்சல் முகவரியூடாக முன்பதிவுசெய்து, சிறைச்சாலை அதிகாரியொருவரின் முன் உரையாட முடியும் என தெரிவிக்கப்படுகின்றன.
இதற்கு எவ்வித கட்டணமும் இன்றி, சிறைச்சாலை சட்ட திட்டங்களுக்கமைய முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளுக்கு வாராந்தமும் , தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு மாதாந்தமும் இவ்வாறு காணொளி மூலம் உறவினர்களுடன் உரையாடுவதற்கு வாய்ப்பளிக்கப்படும்.
இதன் ஆரம்ப கட்டமாக இவ்வாரம் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் காணொளியூடாக உரையாட வாய்ப்பளிக்கப்பட்டது.