கண்டி – கொழும்பு பிரதான வீதியை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கேகாலை மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மண்சரிவு அபாயம் காரணமாக நேற்று முன்தினம் முதல் கண்டி – கொழும்பு பிரதான வீதி, கீழ் கடுகண்ணாவ பகுதியுடன் மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொழும்பு – கண்டி வீதிகளில் பயணிப்போர் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.