follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP2கண்டியில் அடுத்தடுத்து வீழ்ந்த மரங்கள் - 8 வாகனங்கள் சேதம், இருவர் காயம்

கண்டியில் அடுத்தடுத்து வீழ்ந்த மரங்கள் – 8 வாகனங்கள் சேதம், இருவர் காயம்

Published on

கண்டி, திலக் ரத்நாயக்க மாவத்தையில் இரண்டு பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 வாகனங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

இன்று(27) காலை 11 மணியளவில் அடுத்தடுத்து இருந்த இந்த மரங்களே இவ்வாறு வீழ்ந்துள்ளன.

மழை காரணமாக இந்த மரங்களின் வேர்கள் அழுகிவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதனால், அந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறிகள், கார்கள், வேன்கள், முச்சக்கர வண்டிகள் உட்பட 8 வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளதுடன், காயமடைந்த இருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...