இலங்கையர்களுக்கு மீண்டும் தொழில் வாய்ப்பு வழங்கவுள்ளதாக கொரியா அறிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள கொரியா தூதுவர் வுன்ஜின் ஜோன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொரியா வேலை வாய்ப்பு மீண்டும் இலங்கையர்களுக்காக வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதிய தொழில் வாய்ப்பிற்காக கொரியாவுக்கு செல்ல ஆயத்தமாக இருக்கும் இலங்கையர்களுக்கு விரைவில் இந்த சந்தர்ப்பம் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.