ஜப்பான் பாராளுமன்றத் தோ்தலில் பிரதமா் ஃபுமியோ கிஷிடோ தலைமையிலான லிபரல் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, நாட்டின் பிரதமராக மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
அவருக்கு முன்னா் பிரதமராக இருந்த யோஷிஹிடே சுகா, கொரோனா நெருக்கடியை சரியாகக் கையாளவில்லை என்று முறைப்பாடு எழுந்ததனைத் தொடர்ந்து, தனது பதவிக் காலம் முடிவதற்கு சுமாா் 3 ஆண்டுகளுக்கு முன்னரே அவா் பதவியை இராஜினாமா செய்தாா்.
இந்த நிலையில், கடந்த மாதம் 4ஆம் திகதி நடைபெற்ற தோ்தலில் அவரது கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றது.