follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1"இஸ்ரேலிய தொழில்களுக்காக யாருக்கும் பணம் வழங்க வேண்டாம்"

“இஸ்ரேலிய தொழில்களுக்காக யாருக்கும் பணம் வழங்க வேண்டாம்”

Published on

இலங்கையில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரின் செயலாளர்கள் போல் பாவனை செய்து இஸ்ரேலில் தொழில் வழங்குவதாக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மோசடியான முறையில் பணம் பெற்று வருவதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் விவசாயத் துறையில் தொழில் வாய்ப்புகளைப் பெற்ற இலங்கையர்களில் முதல் குழுவாக 80 இளைஞர்கள் இன்று இஸ்ரேலுக்குப் புறப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய விவசாய வேலை வாய்ப்புகள் அரசாங்கத்திடம் இருந்து மட்டுமே கிடைப்பதால், அந்த வேலைகளுக்காக இடைத்தரகர்களிடம் பணம் செலுத்துவதைத் தவிர்க்குமாறும், அவ்வாறு பணம் பெறுபவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால், அது குறித்து தெரிவிக்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொள்கிறார்.

இஸ்ரேலில் விவசாயத் துறையில் தொழில் வாய்ப்புகளைப் பெற்ற இளைஞர்கள் குழுவை சந்தித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இஸ்ரேலில் வேலை செய்வதற்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்டணம் இருப்பதாகவும், அதற்கு மேலதிகமாக எந்த தொகையும் அறவிடப்பட மாட்டாது என்றும், பணத்தை கொடுத்துவிட்டு இஸ்ரேலில் வேலைக்குச் சென்றவர்கள் பற்றிய உண்மைகள் வெளிப்பட்டால், அவர்கள் மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள் என அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலைகளுக்காக தெரிவு செய்யப்பட்ட முதலாவது குழு கடந்த 18ம் திகதி இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இஸ்ரேலுக்கு புறப்பட்டுச் சென்றது.

இந்தக் குழுவில் முப்பது பேர் உள்ளடங்கியதுடன், இருபது பேர் கொண்ட மற்றுமொரு குழு நேற்று (19) காலை இஸ்ரேலுக்குப் புறப்பட்டுச் சென்றதுடன், முப்பது பேர் கொண்ட மற்றுமொரு குழு நேற்று (19) இரவு இஸ்ரேல் புறப்பட்டு சென்றது.

வேலை வாய்ப்பு கிடைத்த எஞ்சியவர்களை விரைவில் இஸ்ரேலுக்கு அனுப்ப பணியகம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது, மேலும் வேலை வாய்ப்பு பெற்ற 50 இளைஞர்கள் வரும் 23ம் திகதி நாட்டிலிருந்து வெளியேற உள்ளனர்.

இஸ்ரேல் அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம், இஸ்ரேலில் விவசாயத் துறையில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டு.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இஸ்ரேல் அரசாங்க அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் பலனாக இந்த வேலை ஒதுக்கீடு கிடைத்துள்ளதுடன், பணியகம் வேலை தேடுபவர்களை மிகக் குறுகிய காலத்தில் இஸ்ரேலுக்கு அனுப்ப முடிந்தமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...