follow the truth

follow the truth

March, 16, 2025
Homeஉலகம்வடகிழக்கு சீனாவில் 116 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு

வடகிழக்கு சீனாவில் 116 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு

Published on

சீனாவின் வடகிழக்குப் பகுதியில் பல இடங்களில் 116 ஆண்டுகளில் காணாத கடும் பனிப்பொழிவு நிகழ்ந்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஷென்யாங் மாகாணத் தலைநகர் லியாவ்னிங் கடும் பனிப்பொழிவை சந்தித்து வருகிறது. இந்நகரில் சராசரி பனிப்பொழிவு 51 செ.மீ. உயரத்தை அடைந்துள்ளது.

1905ம் ஆண்டு முதல் பதிவானதிலேயே மிக அதிகமான பனிப்பொழிவு இதுவாகும் என கூறப்படுகிறது.

இந்த மாகாணத்துக்கு அருகே உள்ள மங்கோலியாவின் உள் பகுதிகளில் கடுமையான பனிப்புயல் ஏற்பட்டு அதில் 5,600 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதனால் அங்கு வாகன மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை குளிர் அலை ஆரம்பித்ததில் இருந்து, வடகிழக்கு சீனாவில் வெப்பநிலை சில பகுதிகளில் 14 டிகிரி செல்சியஸ் வரை குறைவடைந்துள்ளது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்காவை புரட்டி எடுக்கும் சூறாவளி : 20 பேர் பலி

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் சூறாவளியால் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், ஒருபுறம் காட்டுத்தீ பரவுகிறது. மறுபுறம் புழுதி...

கனடாவின் நீதி அமைச்சராக பதவியேற்ற இலங்கையர்

யாழ்ப்பாணத்தில் பிறந்த கரி ஆனந்தசங்கரி கனடாவின் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கனடாவின் 24 ஆவது பிரதமராக மார்க் கார்னி நேற்று...

41 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு பயணிக்க தடை?

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதில் கடுமையாக செயல்பட்டு வருகின்ற தற்போது 41 நாடுகளை சேர்ந்தவர்கள்...