எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் கொண்டுவரப்பட்ட விஷ திரவங்கள் உள்ளிட்ட பொருட்கள் காரணமாக இன்றும் எமது கடல் பரப்பிற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுக்கொண்டுள்ளதாக சபையில் இன்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.
மேலும், இவ்வாறான அழிவுகள் இனியும் இடம்பெறாத வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்க பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமித்து, உரிய தரப்பை வரவழைத்து அவர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு புதிய சட்டங்களை உருவாக்க வேண்டும் என சபையில் வலியுறுத்தினார்.