கடந்த 4ஆம் திகதி வெலிசறை – மஹபாகே பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயதான இளைஞன் உயிரிழந்தார்.
அவர் இன்று பிற்பகல் உயிரிழந்ததாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
16 வயது சிறுவன் செலுத்திய கார் ஒன்று வெலிசறை பிரதேசத்தில் மேலும் சில வாகனங்களுடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.
சம்பவத்தில் மஹபாகே பகுதியைச் சேர்ந்த 52 வயதான ஒருவரே பலியானமை குறிப்பிடத்தக்கது