follow the truth

follow the truth

February, 5, 2025
HomeTOP1கந்தகாடு குற்றச்சாட்டுகளை ஆணையாளர் நாயகம் மறுக்கிறார்

கந்தகாடு குற்றச்சாட்டுகளை ஆணையாளர் நாயகம் மறுக்கிறார்

Published on

புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும், உணவு, தங்குமிடம் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை எனவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு பணியகத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கும் வகையில் நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புனர்வாழ்வுக் காலத்தில் தாதியர்களுக்கு முதலுதவி, அனர்த்த முகாமைத்துவம், உயிர் பாதுகாப்பு, அவசரகால தீயை எதிர்கொள்வது போன்ற பல்வேறு பயிற்சி வகுப்புகளை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

அவர்கள் வெளிநாடு செல்லக்கூடிய வகையில் இரத்தினக்கல் வெட்டுதல், பேக்ஹோ இயந்திரங்களை இயக்குதல் போன்ற பாடநெறிகள் செயற்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் பிரச்சினைகளை தீர்க்க ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தர வதிவிட இணைப்பாளர் மார்க் அண்ட்ரே பிரஞ்சே (Marc-Andre Franche) மற்றும் பிரதமர்...

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்கத் தீர்மானம்

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைப்பது குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கருத்து...

ஜனவரியில் நாட்டை வந்தடைந்த அதிகளவான சுற்றுலாப் பயணிகள்

வரலாற்றில் முதல்முறையாக, 2025 ஜனவரி மாதத்தில் அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...