follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுபோராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவரும் தீர்மானம் இல்லை - ஜோசப் ஸ்டாலின்

போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவரும் தீர்மானம் இல்லை – ஜோசப் ஸ்டாலின்

Published on

அதிபர் – ஆசிரியர் சேவையில் நிலவும் சம்பள பிரச்சினையை முடிவிற்கு கொண்டு வரும் வகையில் அரசாங்கம் தீர்மானத்தை அறிவித்துள்ள போதிலும், தொழிற்சங்க போராட்டத்தை நிறைவுக் கொண்டு வரும் தீர்மானத்தை நாம் எடுக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

நிதியமைச்சரின் உறுதிமொழி வரவு – செலவு திட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து போராட்டம் குறித்து கூட்டாக அறிவிப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

ஆசிரியர் – அதிபர் சேவையில் நிலவும் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு தொழிற்சங்கத்தினர் முன்னெடுக்கும் போராட்டத்தை நிறைவுக்கு கொண்டு வரும் வகையில் அரசாங்கம் தற்போது இணக்கம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் ஊடாக மூன்றில் ஒரு பகுதி சம்பளத்தை ஒரே தடவையில் அதிகரிப்பதாக நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ வாக்குறுதியளித்துள்ளார்.

நிதியமைச்சரின் வாக்குறுதியை தொடர்ந்து தற்போதைய சட்டப்படி கடமையில் ஈடுப்படல், பிற்பகல் 2 மணிக்கு பிறகு போராட்டத்தில் ஈடுப்படல் ஆகிய தொழிற்சங்க போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவருவது தொடர்பில் எவ்வித தீர்மானத்தையும் இதுவரையில் முன்னெடுக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சட்டவிரோதமாக வாகனமொன்றைப் பதிவு செய்த குற்றச்சாட்டில் தொழிலதிபர் கைது

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட டொயோட்டா லேண்ட் க்ரூய்சர் (Toyata Land Cruiser) ரக ஜீப் வாகனமொன்றை, சட்டவிரோதமான முறையில்...

பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் பாராளுமன்ற குழுக்களின் செயல்பாடுகள் குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித்...

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவு

ஜப்பானின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்பான பாராளுமன்ற துணை அமைச்சர் அகிகோ இகுயினா (Akiko Ikuina), பிரதமர் கலாநிதி ஹரிணி...