கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் மகிந்த எஸ் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
மண்சரிவு அபாய எச்சரிக்கை காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இன்றிரவு 10 மணி முதல் மறுஅறிவித்தல் வரை குறித்த பகுதியை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.