மண்சரிவு அபாயம் நிலவும் சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து வௌியேறாதவர்கள், பொலிஸ் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக அதிகாரத்தை பயன்படுத்தி வௌியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சீரற்ற வானிலையால் 17 மாவட்டங்களை சேர்ந்த 126 பிரதேச சபை பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.